திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தள்ளிவைப்பு !

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தள்ளிவைப்பு !

Share it if you like it

மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளவுக்கு அதிகமாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதால், இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை தங்களையும் ஒரு சாட்சியாக இணைக்க வேண்டும் என மனு அளித்துள்ளது.

இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜராகாத நிலையில், அவரது மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் மற்றும் அமைச்சரின் தம்பி சண்முகநாதன் ஆகிய நான்கு பேர் ஆஜராகினர்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு 16வது சாட்சியை மறு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும், மேலும் வழக்கு தொடர்பான சில ஆவணங்களில் குறியீடு செய்ய வேண்டும் என அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு சார்பில் இன்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு இன்று அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் யாரும் ஆஜராகாத நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கறிஞர் ஆஜராகி இருந்தார் .

இதனையடுத்து, வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி ஐயப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு மனு மீதான உத்தரவு வருகிற ஜூன் 19ஆம் தேதி வரும் வாய்தாவில் பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *