என் நாக்கு கருநாக்கு; நான் சொன்னால் பலிக்கும்: நாக்கை நீட்டிய அமைச்சர்!

என் நாக்கு கருநாக்கு; நான் சொன்னால் பலிக்கும்: நாக்கை நீட்டிய அமைச்சர்!

Share it if you like it

ஸ்டாலின் தனது இறுதி மூச்சு வரை தமிழக முதல்வராக இருப்பார். நான் சொன்னால் பலிக்கும் என அமைச்சர் மஸ்தான் தொண்டர்கள் மத்தியில் தனது நாக்கை நீட்டிய சம்பவம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புர மாவட்டம், திண்டிவனத்தில் நகர தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டார். மேலும், தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, அமைச்சர் பேசும் போது இவ்வாறு கூறினார் ;

தி.மு.க.வை தேர்தல் களத்தில் விமர்சனம் செய்தவர்கள், ஜோசியம் பேசியவர்கள், ஸ்டாலின் எந்த கால கட்டத்திலும் முதல்வராக வர முடியாது. அவரது ஜாதகத்தில் அந்த அம்சர் இல்லை என தி.மு.க. மீது இருந்த காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தினர். இதில், அதிகமாக, ஜோசியம் பார்த்தவர் முன்னாள் முதல்வர் பழனிசாமி தான். ஸ்டாலின் எந்த காலத்திலும் வர முடியாது என சவால் விட்டார். ஆனால், தமிழகம் முழுவதும் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து, ஜோதிடத்தை
பொய்யாக்கி, விதியை மதியால் வென்றார்.

தி.மு.க.வில் ஜந்தாவது தலைமுறை தலைவரை உருவாக்கி விட்டோம். நாம் நூறாண்டு காலமாக திராவிட இயக்கத்தை வளர்த்தோம். இனி, நுறாண்டு காலம் திராவிட இயக்கம் இருக்கும். ஸ்டாலின் இறுதி மூச்சு வரை முதல்வராகத் தான் இருப்பார். இதுதான் நான் சொல்லும் ஜாதகம்,ஜோசியம் நானும் ஜோசியக்காரத் தான். உங்களுக்கு, சந்தேகம் இருந்தால், என் நாக்கை உற்றுப் பாருங்கள். கருநாக்கு இருப்பவர்கள் கூறினால் பலித்து விடும். என் நாக்கு கருநாக்கு என்று கூறினார். இதையடுத்து, தனது கட்சி தொண்டர்கள் முன்னிலையில் தனது நாக்கை நீட்டி காட்டினார்.

இதுதான் பகுத்தறிவு கட்சியா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Image

Share it if you like it