சட்டப்பேரவையை நாறடித்த திமுக அமைச்சர் : இதுதான் திராவிட வளர்ப்பா ?

சட்டப்பேரவையை நாறடித்த திமுக அமைச்சர் : இதுதான் திராவிட வளர்ப்பா ?

Share it if you like it

சட்டபேரவையில் திமுக அமைச்சர் செய்த முகம் சுளிக்கும் சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் உயர்கல்வி அமைச்சாராக இருக்கும் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் சட்டபேரவையில் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு சட்டசபையின் உள்ளே எச்சில் துப்புகிறார். அவரின் முன்பு தமிழக முதல்வர் ஸ்டாலின் அமர்ந்துள்ளார்.

இந்த காணொளி பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கிறது. நாட்டு மக்களின் பிரச்சனைகளை எடுத்துரைக்கும், புனிதமான இடமான பாராளுமன்றத்தில் திமுக அமைச்சர் இதுபோன்ற செயல்கள் செய்வது நியாயமா ? பாராளுமன்றத்தில் எச்சில் துப்புவதற்காகவா மக்கள் உங்களுக்கு வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தார்கள் ? இதுதான் திராவிட வளர்ப்பா ? இவ்வாறு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் திமுக அமைச்சரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சமீபத்தில் தான் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்துவரும் எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழக போக்குவரத்துத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். தமிழக முதல்வரின் பரிந்துரையை ஏற்று, இந்த மாற்றம் செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, “தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பலமுறை சாதியைச் சொல்லி என்னை அவமானப்படுத்தினார்” என்று ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் கூறியிருந்தார். இந்த சர்ச்சையின் எதிரொலியாகவே, அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனின் துறை மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *