திமுக அமைச்சரின் சொத்து குவிப்பு வழக்கு : விசாரணை நடத்த உத்தரவிட்ட கோர்ட் !

திமுக அமைச்சரின் சொத்து குவிப்பு வழக்கு : விசாரணை நடத்த உத்தரவிட்ட கோர்ட் !

Share it if you like it

திமுகவில் தமிழக மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர் இந்த வழக்கானது அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட அவரின் குடும்பத்தினர் 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் விசாரணையின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்தது.

இதனை தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரின் குடும்பத்தாரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. தனது சொத்துக்களை முடக்கியதற்கு எதிராகவும், தன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரியும் அனிதா ராதாகிருஷ்ணன் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அமலாக்கத்துறை சார்பாக வழக்கறிஞர் ஆஜராகி, அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கை அமலாக்கத்துறை தீவிரமாக விசாரித்து வருவதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய கூடாது என்று வாதிட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் மீதான சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி அவரின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் அவரிடம் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *