- நீட் தேர்வு ரத்து.
- குடும்ப தலைவிகளுக்கு 1,000 ரூபாய்.
- பூரண மதுவிலக்கு.
- கொரோனாவில் இறந்தவர்களுக்கு 1 கோடி.
என்று பல தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, நாட்கள் செல்ல, செல்ல, தனது சுயரூபத்தை தமிழக மக்களிடம் தற்பொது காட்ட துவங்கியுள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
பல்வேறு நெல்கொள்முதல் நிலையங்களில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் வீணாகிய சம்பவம் அடங்குவதற்குள் தற்பொழுது சென்னையில் பெய்த மழைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும், சென்னை மக்களுக்கும் போதிய வசதிகளை முதலில் தி.மு.க அரசு ஏற்படுத்தி கொடுத்து விட்டு.
39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதும், ரூ.2,500 கோடியில் பூங்கா அமைப்பதையும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.