மத்திய அரசின் திட்டத்தில் ’ஸ்டிக்கர்’ ஒட்டிய திமுக அரசு..!

மத்திய அரசின் திட்டத்தில் ’ஸ்டிக்கர்’ ஒட்டிய திமுக அரசு..!

Share it if you like it

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

ஏழை, எளியவர்களின், நலன் கருதி மத்திய அரசு பல்வேறு நல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு திட்டமான முத்ரா கடன் மற்றும் சுவாநிதி திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலம் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த அஸ்வினுக்கு தமிழக முதல்வர் உதவி உள்ளார். கொரோனா தடுப்பூசி திட்டத்தில் ஸ்டிக்கர், ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கிய உதவியில் ஸ்டிக்கர், என தமிழக அரசு தொடர்ந்து ஸ்டிக்கர் ஒட்டி வரும் நிலையில். மத்திய அரசின் திட்டத்திலும் திமு.க அரசு ஸ்டிக்கர் ஒட்டி உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் டுவிட்டர் பதிவு இதனை மேலும் உறுதிப்படுத்துவது போல் அமைந்து உள்ளது.

சகோதரி அஸ்வினி இல்லத்திற்கு முதலமைச்சர் சென்று வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது! அநீதி யாருக்கும் நடக்கக் கூடாது என்பது தமிழக பா.ஜ.க-வின் நிலைப்பாடு! மத்திய அரசினுடைய முத்ரா கடன் திட்டத்தையும், சுவா நிதி திட்டத்தையும் அஸ்வினி அவர்களுக்கு அறிமுகப்படுத்தியதற்காக

முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகள்! திரு. நரேந்திர மோடி அவர்களுடைய அனைத்து திட்டங்களும் சகோதரி அஸ்வினி போன்றவர்களுக்கு தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது தமிழக முதல்வர் அனைத்து மத்திய அரசு திட்டங்களையும் மக்களுக்கு இதேபோல் நேரடியாக எடுத்துச் செல்வார் என்று நம்புகின்றோம்!


Share it if you like it