இலக்கு வைத்து மதம் மாற்றம்: ஆதாரத்தை வெளியிட்ட பிரபல எழுத்தாளர்!

இலக்கு வைத்து மதம் மாற்றம்: ஆதாரத்தை வெளியிட்ட பிரபல எழுத்தாளர்!

Share it if you like it

லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்., தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் மதம் மாற்றம் நடைபெற்றதற்கான ஆதாரத்தை வெளியிட்டிருக்கிறார் பிரபல எழுத்தாளர் மாரிதாஸ்.

அரியலூர் மாணவி லாவண்யா, மதம் மாற மறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் மட்டுமில்லாது அனைத்துத் தரப்பு மக்களையும் கடும் அச்சத்தில் உறையவைத்துள்ளது. மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பா.ஜ.க., வி.ஹெச்.பி., இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் இன்று வரை தொடர்ந்து போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றன.

ஆனால், தொலைக்காட்சி நெறியாளர்கள், நடுநிலை பத்திரிகையாளர்கள் என்று தம்மை காட்டிக் கொள்ளும் யாரும் இதுவரை லாவண்யா மரணம் குறித்து வாய் திறக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு தமிழக முழுவதும் எழுந்து வருகிறது. இந்த நிலையில்தான், எழுத்தாளர், பத்திரிகையாளர், விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்ட மாரிதஸ் தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் மதம் மாற்றம் நடைபெறுகிறது என்பதற்கான பகீர் கிளப்பும் ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு அலறி அடித்துக் கொண்டு ஓடிய தமிழக முதல்வர் ஸ்டாலின், மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு கூட இரங்கல் தெரிவிக்காமல் சைக்கிள் ஓட்டி பொழுதை போக்குவது கடும் கண்டனத்திற்குறியது என்று மக்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it