ஈரான் அதிபரின் சோகமான மரணம் :-
கடந்த மே 20ஆம் தேதி ஈரானில் உள்ள மலைப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானதில், அந்நாட்டு அதிபர் சையது இப்ராஹிம் ரெய்சி உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் உடன் சென்ற வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட 8 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு உலக தலைவர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டனர். பிரதமர் நரேந்திர மோடியும் தனது இரங்கல் அறிக்கையை வெளியிட்டார். இதனை தொடர்ந்து ஈரான் அதிபருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மே 21 அன்று இந்திய அரசு மாநில துக்கத்தை அறிவித்தது.
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் ரெய்சி உட்பட 9 பேர் உயிரிழந்ததை ஈரான் அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை தொடர்ந்து, இடைக்கால அதிபராக துணை அதிபர் முகமது மொக்பர் நியமிக்கப்பட்டார். ஈரான் சட்ட விதிகளின்படி, அடுத்த 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு, புதிய அதிபர் தேர்வுசெய்யப்படுவார். அதுவரை இடைக்கால அதிபராக மொக்பர் பதவி வகிப்பார் என்று தகவல் வெளியானது.
திமுக நிர்வாகிகளின் வன்மம் :-
இந்நிலையில் ஈரான் அதிபரின் சோக மரணத்திற்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு பாஜக தொழில்துறை பிரிவு துணைத் தலைவர் செல்வ குமார், ஈரான் அதிபரின் துயர மரணம் குறித்த செய்தியை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்த பதிவிற்கு பதிலடி தரும் வகையில்,திமுகவின் கோவை கிழக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் காசி குப்புசாமி, “ஈரான் அதிபருக்கு நேர்ந்த கதியை இந்தியப் பிரதமரும் சந்திக்க வாழ்த்துகிறேன்” என்று காசி குப்புசாமி, பதிவிட்டுள்ளார்.
திமுக நிர்வாகியின் சர்ச்சை கருத்து வைரலாகியதை தொடர்ந்து பிரதமரின் மரணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அவரது இழிவான பதிவுக்காக காசி குப்புசாமி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து பாஜக ஆதரவாளர் ஒருவர்,“கர்நாடகாவில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக X-ல் பதிவிட்டதாகக் கூறி பிகு மத்ரேவைக் கைது செய்ய கர்நாடக போலீஸார் மகாராஷ்டிராவுக்குச் சென்றதைப் போல குஜராத் போலீஸார் வந்து குப்புசாமியைக் கைது வேண்டும் ” என்று பதிவிட்டார்.
பாஜக ஆதரவாளர்களின் தொடர் எதிர்ப்பை தொடர்ந்து, திமுக ஆதரவாளர்கள் சிலர், அந்தப் பதிவை உடனடியாக நீக்குமாறு காசி குப்புசாமியிடம், “மோடி நமது கருத்தியல் எதிரி மட்டுமே ஆனால் எங்கள் பரம்பரை எதிரி அல்ல. தயவு செய்து நீக்கவும்” என்று கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து காசி குப்புசாமி பயந்து அந்த பதிவை உடனடியாக நீக்கினார். பதிவை நீக்கிய பிறகு, குப்புசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில் மன்னிப்புக் கோரி, “பிரதமர் குறித்த பதிவானது யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் நான் வருந்துகிறேன். நான் பிரதமர் பதவியைப் பற்றி மட்டுமே குறிப்பிட்டேன், தனிப்பட்டவர் அல்ல” என்று பதிவிட்டார்.

இந்நிகழ்வினை பொறுத்தவரை காசி குப்புசாமி மட்டுமல்ல, திமுக கட்சியை சேர்ந்த பலரும் மற்றும் ஐ.என்.டி.ஐ கூட்டணி ஆதரவாளர்களும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வன்மத்தை கக்கியுள்ளனர். திமுக ஆதரவாளரான மாலிக் முரளி கிருஷ்ணன் நின்னியப்பன் என்பவர், ஈரான் அதிபரின் மரணத்தை குறிப்பிட்டு, இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருக்கிறதே ? ஒரு நாய் (பிரதமர் மோடி) ஒன்று தினமும் வெவ்வேறு விமானங்களில் பயணித்து கொண்டிருக்கிறது, என்று பிரதமர் மோடியை தாக்கி பதிவிட்டார். இதேபோல் மற்றொரு திமுக ஆதரவாளரான உசிலம்பட்டி ராகோ என்பவர், “நல்லவர்களின் (ஈரான் அதிபர்) கதி இது என்றால், நமது ஜியின் (பிரதமர் மோடி) கதியை நினைத்துப் பாருங்கள்”,அல்லாஹ் மட்டுமே அவனைக் காப்பாற்ற முடியும்.”இவ்வாறு பாரத பிரதமரை இழிவுபடுத்தி பதிவிட்டார். திமுக ஆதரவாளர் சரவணன் கூறுகையில், “நல்லவர்கள் கொல்லப்படுகிறார்கள் ஆனால் ஒரு தோழர் (பிரதமர் நரேந்திர மோடி) தனி விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் ஜாலியாக சுற்றி வருகிறார். அந்த நபருக்கு எதுவும் நடக்கவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
திமுக செயல் தலைவர் காசி குப்புசாமி பிரதமர் மோடி குறித்த சர்ச்சை பதிவை நீக்கிவிட்டு வருத்தம் தெரிவித்தாலும், பிரதமரின் மரணத்திற்கு ஆசைப்பட்ட குப்புசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குப்புசாமி மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காது, எனவே கர்நாடக போலீசார் பிகு மத்ரேவை கைது செய்தது போல் மகாராஷ்டிரா காவல்துறை, உத்தரபிரதேசம் அல்லது குஜராத் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து குப்புசாமியை கைது செய்ய வேண்டும் என்று பாஜக ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.