இன்ஸ்டா மூலம் மாணவிகளுக்கு போதை பொருள் சப்ளை : பெற்றோர்களே உஷார் !

இன்ஸ்டா மூலம் மாணவிகளுக்கு போதை பொருள் சப்ளை : பெற்றோர்களே உஷார் !

Share it if you like it

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல காபி ஷாப் ஒன்றிற்கு தனியார் பள்ளி மாணவி ஒருவர் அடிக்கடி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட சில இளைஞர்கள் அந்த மாணவியிடம் நட்பாக நெருங்கி பழகியுள்ளனர். இதனை தொடர்ந்து பிறந்த நாள் பார்ட்டி தருவதாக இளைஞர்கள் மாணவியிடம் கூறி ஓயோ சில்வர்கீ தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவிக்கு போதைப்பொருள் கலந்த இனிப்பை சாப்பிட தந்துள்ளனர். அதனை சாப்பிட்டு அப்பெண் மயங்கி விழுந்துள்ளார். மாணவி போதையில் இருப்பதை சாதகமாக பயன்படுத்தி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சினிமா ஆடை வடிவமைப்பாளர் அகிரா,சோமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவத்தில் தலைமறைவாக இருந்த கோடம்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் என்கிற வில்லியம்சை திண்டிவனத்தில் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் மெத்த பெட்டமைன் என்கிற போதை பொருளை ஸ்வீட்டில் வைத்து கொடுத்தது தெரிய வந்தது. வில்லியம்ஸ் மண்ணடி பகுதியில் இருந்து போதை வஸ்துக்களை வாங்கி வந்து இன்ஸ்டா மூலம் பள்ளி மாணவிகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளார். வில்லியம்ஸுடன் தங்கி இருந்த விழுப்புரம் சூர்ய பிரகாஷ், சைதாப்பேட்டை அஜய் ஆகியோரிடமிருந்து 2 கிராம் மெத்த பெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்து அவர்களையும் சிறையில் அடைத்தனர்.

பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட வில்லியம்ஸ் மீது போக்ஸோ வழக்குடன் போதை பொருள் வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *