ஆக்கிரமிப்பு விவகாரம் : நடிகர் பிரகாஷ்ராஜ் மீது காவல்துறையில் புகார் !

ஆக்கிரமிப்பு விவகாரம் : நடிகர் பிரகாஷ்ராஜ் மீது காவல்துறையில் புகார் !

Share it if you like it

கொடைக்கானல் பகுதியில் பொதுப் பாதையை மறித்து, நீரோடை ஒன்றை ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

‘பாரதிய கிஷான்’ என்ற அமைப்பின் மாநிலச் செயலாளர் அசோகன் என்பவர் இப்புகாரை அளித்துள்ளார்.
கொடைக்கானல், பேத்துப் பாறையில் உள்ள அருவிக்கு அருகே பிரகாஷ்ராஜுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு உரிய அனுமதிய இன்றி வீடு கட்டியதாக கடந்த ஆண்டிலேயே அப்பகுதி விவசாயிகள் வருவாய்த்துறை ஊராட்சி நிர்வாகத்தினரிடமும் புகார் அளித்துள்ளதை அடுத்து விசாரணை நடை பெற்றது.
அப்போது உரிய அனுமதியின்றி பிரகாஷ்ராஜ் வீடு கட் டியிருப்பது தெரியவந்ததாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இந்நிலையில், தனது வீட் டுக்கு அருகே உள்ள நீரோடையை பிரகாஷ்ராஜ் ஆக்கிரமித்துள்ளதாக மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது. அவரது வீடு சதுப்பு நிலத்தில் அமைந்துள்ளதாகவும் விவசாயிகள் சென்று வரும் பொதுப் பாதையில் சூரிய சக்தி மின் வேலி அமைத்து பாதையை மறித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சதுப்பு நிலத்தில் 600 சதுர அடி அளவிலான வீடுகளை மட் டுமே கட்ட முடியும். ஆனால் அதை கவனத்தில் கொள்ளாமல் 2000 சதுர அடிக்கு அவர் வீடு கட்டி உள்ளார். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *