ஈரோடில் பாஜக பிரமுகர் அடித்து கொலை!

ஈரோடில் பாஜக பிரமுகர் அடித்து கொலை!

Share it if you like it

ஈரோடு மாவட்டம் அரசலூர் அருகே உள்ள தலைமலை பகுதியை சேரந்த வடிவேல் என்பவர் முன்னாள் திமுக வார்டு செயளாலராக இருந்து வந்துள்ளார். வடிவேல் நேற்று (30-12-2021) மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி அவர்கள் தலைமையில் பாஜகவில் இணைந்துள்ளார். இதனை பொறுத்து கொள்ளாத திமுக முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வர மூர்த்தி என்பவர் வடிவேலை அடித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்கள்.

பாஜகவில் இணைந்த வடிவேல் நேற்று இரவு கோவில் வளாகத்தில் உறங்கி இருந்தார். பழனி மலை கோவிலுக்காக மாலை அணிவித்து வடிவேலுடன் அவர் நண்பர்கள் சக்திவேல், ஆறுமுகம், சிவா உடன் தங்கியுள்ளார்கள். அப்போது கோவில் வளாகத்திற்கு வந்த திமுக முன்னாள் கவுன்சிலர் ஈஸ்வர மூர்த்தி வடிவேலை சரமாரியாக தாக்கியுள்ளார். உடன் இருந்த நண்பர்கள் ஈஸ்வரனை தடுத்ததற்கு அவர்களையும் தகாத வார்தைகளால் திட்டி அவர்களுடைய வாகனங்களை சேதப்படுத்தியுள்ளார். தாக்கப்பட்ட வடிவேல் சம்பவ இடத்தில் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஈஸ்வர மூர்த்தியை கைது செய்தனர். உயிர் இழந்த வடிவேலின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி கொலை சம்பவத்தை பற்றி போலீசாரிடம் கொலை செய்த திமுக பிரமுகர் ஈஸ்வர மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் உயிர் இழந்த வடிவேல் உறவினருடன் ஆறுதல் தெரிவித்தார். ஈஸ்வர மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையம் முன்பு பாஜகவினர் முற்றுகையிட்டனர். திமுகவில் இருந்து பாஜகாவில் இணைந்த வடிவேல் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it