கழன்று விழுந்த கியர் ராடு : கைவலிக்க பிடித்துக்கொண்ட பயணி : அரசு பேருந்தின் அவலம் !

கழன்று விழுந்த கியர் ராடு : கைவலிக்க பிடித்துக்கொண்ட பயணி : அரசு பேருந்தின் அவலம் !

Share it if you like it

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டிலிருந்து பண்ணைக்கட்டிற்கு அரசு பேருந்து ஒன்று சென்று சாலையில் சென்று கொண்டிருக்கிறது. அப்போது பேருந்தில் இருந்த கியர் ராடானது கழன்று தனியே வந்துள்ளது. இதனால் பதறிப்போன ஓட்டுநர் என்னசெய்வதென்று தெரியாமல் திருதிருவென முழித்து கொண்டு இருந்துள்ளார். அப்போது பேருந்தில் ஓட்டுனருக்கு பின்பக்கம் அருகில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் நான் பத்திரமாக கியர் ராடை பிடித்து கொள்கிறேன். நீங்கள் பயமில்லாமல் பேருந்தை ஓட்டுங்கள் என்று பயணி ஒருவர் கியர் ராடை கடைசி நிறுத்தம் வரை கையால் பிடித்து கொண்டே சென்றுள்ளார். இடையில் கை வலித்தாலும் எடுக்காமல் நீண்ட நேரம் பிடித்துள்ளார். இதனை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள சாதாரண அரசு பேருந்துகளே தரமற்று மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நிலையில் உள்ளது. இதனை சரி செய்ய முடியவில்லை திமுக அரசினால். இந்தநிலையில் வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டை ஈர்த்து தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த போகிறாரா முதல்வர் ஸ்டாலின் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

https://x.com/polimernews/status/1753279478925828513?s=20


Share it if you like it