சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு பாத பூஜை : நெகிழ்ச்சி சம்பவம் !

சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு பாத பூஜை : நெகிழ்ச்சி சம்பவம் !

Share it if you like it

நேற்று நாடு முழுவதும் நமது நாட்டின் 78 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் இரவு பகல் வெயில் குளிர் என்று பாராமல் நமது நாட்டை பாதுகாத்து வரும் ராணுவ வீரர்களை கவரவிக்கும் வகையில், வேலூர் மாவட்டம், கே வி குப்பம் ஒன்றியம் கீழ் முட்டுக்கூர் கிளை கமிட்டியில், இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் பாரதத்தின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு பாத பூஜை செய்யப்பட்டு, அவர்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. பிறகு அவர்கள் கையால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

இதேப்போல் மதுரை புறநகர், அலங்காநல்லூர் ஒன்றியத்தின் இந்து இளைஞர் முன்னணி சார்பில், 78 வது சுதந்திர தின கொண்டாட்டத்தில், அரசு பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு இனிப்பு, பேனா, பென்சில், அளவு கோல், நோட்டுகள் என கோட்ட செயலாளர் பாலன் வழங்கினார்.

மேலும் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகரில் உள்ள மணி நகரத்தில் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் திருக்கோயில் அம்மனுக்கு, இந்து அன்னையர் முன்னணி சார்பில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமை அன்று மஞ்சள் நீர் அபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது. மேலும் திருப்பூர் – தாராபுரம் ரோடு மண்டல் கிழக்கு ஒன்றியம், காட்டுப்பாளையம் பகுதியில், இந்து அன்னையர் முன்னணி சார்பாக, புற்றுக்கண் கோயிலுக்கு தீர்த்த கலசம் எடுத்து, அம்மனுக்கு மஞ்சள்நீர் அபிஷேகம் நடைபெற்றது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *