அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில் கோயம்பேடு பகுதிக்கு வரும் மெட்ரோ ரயிலில் வெளியாகும் அறிவிப்பில் புரட்சித்தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் என குறிப்பிடாமல் வெறும் ‘புறநகர் பேருந்து நிலையம்’ என அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். திமுக அரசும் மெட்ரோ நிர்வாகமும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை இருட்டடிப்பு செய்வதாக கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி இதை சரி செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.