டெல்லியில் பிரதமர் மோடி, ஜி-20 நாடாளுமன்ற சபாநாயகர்களின் உச்சி மாநாட்டை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இன்று தொடங்கி வைத்தார், அம்மாநாட்டில் ரஷ்யா,இத்தாலி,சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, உலக அளவில் ஒற்றுமையும்,அமைதியும் நிலவ வேண்டும் எனவும், சகோதரத்துவடன் அனைவரும் இணைந்து முன்னேறி செல்ல வேண்டிய நேரம் எனவும் குறிப்பிட்டார். மனித குலத்திற்கு எதிரான பயங்கரவாதம் எவ்வளவு சவால் நிறைந்தது என்பதை தற்போது உலகம் உணர்ந்துள்ளதாகவும் கூறினார்.