கடவுளின் பணியும், தேசத்தின் பணியும் மிக வேகமாக நடந்து வரும் நேரம் – பிரதமர் மோடி !

கடவுளின் பணியும், தேசத்தின் பணியும் மிக வேகமாக நடந்து வரும் நேரம் – பிரதமர் மோடி !

Share it if you like it

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள தாராப் என்ற இடத்தில் வாலிநாத் மகாதேவ் கோவிலை திறந்து வைத்து பிரார்த்தனை செய்த பின்னர் பொது நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

இதற்கிடையே, 8,350 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

அயோத்தியில் இன்று, ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு, நாடு முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் போது, எதிர்மறையாக வாழும் மக்கள் வெறுப்பின் வெறுப்பின் பாதையை விட்டு வெளியேறவில்லை. கடவுளின் பணியும், தேசத்தின் பணியும் மிக வேகமாக நடந்து வரும் நேரம்.

நாட்டில் ஒருபுறம் கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. மறுபுறம் ஏழைகளுக்கு லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.


Share it if you like it