ஓட்டை உடைசல் நிலையில் அரசு பேருந்துகள் : நமக்கு எதுக்குய்யா ஏர்போர்ட் !

ஓட்டை உடைசல் நிலையில் அரசு பேருந்துகள் : நமக்கு எதுக்குய்யா ஏர்போர்ட் !

Share it if you like it

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 2000 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டசபையில் அறிவித்தார். மேலும் மதுரை மற்றும் கோவையை தொடர்ந்து திருச்சியிலும் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து உள்ளார். 150 கி.மீ. சுற்றளவில், புதிய விமான நிலையங்கள் அமைக்க முடியாது என்பதையும்,ஓசூரில் அமைந்துள்ள விமான நிலையம், தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமான நிலையம் என்பதால் மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடியாது என்பதை அண்ணாமலை சுட்டிக்காட்டி வெறும் விளம்பரத்துக்காக ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என்று தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்று விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவை விதி 110 ன் கீழ் அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று, திமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு. வில்சன் அவர்கள், ஓசூர் விமான நிலையம் குறித்துக் கேட்ட கேள்விக்கு, அன்றைய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெனரல் திரு. V.K. சிங் அவர்கள், தெளிவாகப் பதிலளித்துள்ளார்.

இந்திய அரசு மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கிடையேயான ஒப்பந்தத்தின்படி, பெங்களூர் சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு, 150 கி.மீ. சுற்றளவில், புதிய விமான நிலையங்கள் அமைக்க முடியாது என்பதையும், ஓசூரில் அமைந்துள்ள விமான நிலையம், TAAL என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமான நிலையம் என்பதால், மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடியாது என்பதையும், ஓசூர் விமான நிலையத்தைப் பயணிகள் பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்த ஆகும் செலவு 30 கோடி ரூபாய் என்றும் விளக்கமாகக் கூறியதோடு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் ஆய்வு முடிவுகளையும் எடுத்துக் கூறியிருந்தார். அத்துடன், தமிழக அரசு TAAL நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்திப் பயன்படுத்தலாம் என்றும் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்.

இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. 30 கோடி ரூபாய் செலவில் ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காமல், வெறும் விளம்பரத்துக்காக, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என்று தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள். ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு, 110 ஆம் விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 7,200 புதிய பள்ளி வகுப்பறைகள், 16,390 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்பாடு, 1,000 புதிய பேருந்துகள், 500 மின்சாரப் பேருந்துகள் உள்ளிட்டவை, இரண்டு ஆண்டுகளாக அரைகுறை நடவடிக்கைகளோடு நிற்கின்றன. இரண்டு ஆண்டுகளில், பேருந்துகளைக் கூட வாங்காத திமுக, தற்போது விமான நிலையம் அமைக்கவிருப்பதாகக் கூறியிருப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை.

கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், மூன்று ஆண்டுகளாக விளம்பர அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நிறைவேற்றச் சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக? இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அரசு பேரூந்துகளோ காலாவதி ஆகி ஓடி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. பேருந்து ஓடும் போதே சக்கரம் தனியாக கழண்டு ஓடுவது, இருக்கை கழன்று விழுவது, பிரேக் டவுன் ஆவது, பேருந்துக்குள் மழைநீர் ஒழுகுவது என அவல நிலையில் உள்ளது. இதனால் அரசு பேருந்தில் மக்கள் பயணிக்கவே பயப்படுகின்றனர்.

மாநகர போக்குவரத்து கழகத்தில் 450 க்கும் மேற்பட்ட தற்காலிக ஓட்டுனர்கள் வேலை செய்து வருகிறார்கள். சென்னையில் போக்குவரத்து நெரிசல், ஓட்டுவதற்கு தகுதியற்ற பேருந்துகள், மோசமான சாலைகள் என பல்வேறு காரணங்களால் 100 க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் பணியை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார்.

அரசு பேருந்தை சரியாக தமிழக அரசால் நிர்வகிக்க முடியவில்லை. இதில் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்க போவதாக அறிவித்தால் மக்களின் மனநிலை என்னவாக இருக்கும்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *