தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இந்து முன்னணி மனு !

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இந்து முன்னணி மனு !

Share it if you like it

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பத்மகிரி மலைக் கோவிலில், சுவாமி திருமேனிகளை நிறுவக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இந்து முன்னணியினர் மனு .அளித்துள்ளனர்.

திண்டுக்கல் பத்மகிரி மலைக்கோவிலில் ஸ்ரீ அபிராமி அம்மன்- பத்மகிரீஸ்வரர் விக்கிரகங்களை நிறுவ மக்களிடம் ஆதரவு திரட்டுவதற்கு திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த மாதம் கையெழுத்து இயக்கத்தை இந்து முன்னணி நடத்தியுள்ளது.

இதில் 27170 குடும்பத்தினரிடம் கையெழுத்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த கையெழுத்து பிரதிகள் அனைத்தையும், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களிடம் இந்து முன்னணி மாநில தலைவர் திரு காடேஸ்வரா சுப்பிரமணியம் ஜி அவர்கள் வழங்கினார்.

இதனைதொடர்ந்து தென் பாரத அமைப்பாளர் திரு. க. பக்தவச்சலம் மாநில செயலாளர் VS செந்தில்குமார்
மாநில செய்தி தொடர்பாளர் AT இளங்கோவன்
மாவட்டத் தலைவர் RP ராஜா ஆகியோர் திண்டுக்கல் பத்மகிரி மலையின் வரலாறு மற்றும் இந்து முன்னணியின் செயல்பாடுகள் குறித்து ஆளுநர் அவர்களிடம் விளக்கி கூறினர்.

இதனை தொடர்ந்து கேட்டுக் கொண்ட ஆளுநர் அவர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *