கோயில் நிதி… அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் குட்டு!

கோயில் நிதி… அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் குட்டு!

Share it if you like it

கோயில் நிதியில் இருந்து அறநிலையத்துறைக்குத் தேவையான செலவுகளை மேற்கொள்ள முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 36,000 கோயில்கள் இருக்கின்றன. இக்கோயில்களின் மூலம் கிடைக்கும் நிதை, கோயில் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதி. ஆனலா, அறநிலையத்துறைக்குத் தேவையான செலவுகள் மட்டுமின்றி, இதர சில பல தேவைகளுக்கும் கோயில் நிதிகளை பயன்படுத்தி வருகிறது தமிழக அரசு. குறிப்பாக, தி.மு.க. ஆட்சிக் வந்த பிறகு, கோயில் நிதிகள் பல்வேறு வகைகளில் செலவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் கோயில் வருமானம் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கல்லூரிகள் தொடங்கப்போவதாக தி.மு.க. அரசு அறிவித்தது. இதற்கு கோயில் நிதிகளை பயன்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியானது. ஆகவே, கோயில் நிதியில் இருந்து கல்லூரிகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோயில் நிதியை தவறாக பயன்படுத்துவதை எதிர்த்தும் சென்னையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்து வருகிறது. இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறநிலையத் துறை ஆணையர், இணை ஆணையர்கள், ஆய்வாளர்கள் அலுவலகங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும், முந்தைய ஆட்சியில் அமைச்சருக்கு வாகனங்கள் வாங்கவும், கணினிமயமாக்கவும், பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கும், மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டவும் கோயில் நிதி பயன்படுத்தப்படுவதாக தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை சமர்ப்பித்தார். மேலும், கோயில்களை நிர்வகிப்பதற்காக நிர்வாகக் கட்டணமாக மொத்த வருமானத்தில் 12 சதவீதம் வழங்கப்படும் நிலையில், கோயில் நிதியை அறநிலையத்துறைக்காக பயன்படுத்துகிறார்கள். எந்த தயக்கமும் இல்லாமல் கோயில் நிதியை அரசு நிதி போல பயன்படுத்துகிறார்கள். இது குறித்து சிறப்பு தணிக்கை செய்தால் அனைத்து விஷயங்களும் அம்பலத்துக்கு வரும்” என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கோயில் நிதியை தேவையில்லாமல் வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது. அறநிலையத் துறை செலவுகளுக்கு தொகுப்பு நிதியில் இருந்துதான் செலவு செய்ய வேண்டும். அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோயில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது. கண்காணிப்பு என்ற பெயரில் கோயில் வளங்களை எடுக்க முடியாது” என்று தெரிவித்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Share it if you like it