மதமாற்ற சக்திகளிடம் சிக்காமல் இந்துக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் – இந்து முன்னணி !

மதமாற்ற சக்திகளிடம் சிக்காமல் இந்துக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் – இந்து முன்னணி !

Share it if you like it

மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் வழியாக பங்களாதேஷ் இஸ்லாமியர்களை ஊடுருவச் செய்து பாரத நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்வதாக இந்து முன்னணி குற்றச்சாட்டை வைத்துள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

பாரத நாட்டிற்குள் மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் வழியாக பங்களாதேஷ் இஸ்லாமியர்களை ஊடுருவச் செய்து பாரத நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்யும் பங்களாதேஷ் ஊடுருவல்காரர்களை கட்டுப்படுத்தாமல் பங்களாதேஷை உடைத்து கிறிஸ்துவ நாடாக முயற்சி என கூப்பாடு போடுவது
மட்டும் நியாயமா.?

பாரத நாட்டில் இந்துக்களின் சகிப்புத்தன்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஒருபுறம் அந்நிய நாட்டில் இருந்து ஊடுருவும் பயங்கரவாத சக்திகள் பயங்கரவாத செயல்களிலும் லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத், பிஸ்னஸ் ஜிகாத் போன்றவைகளில் ஈடுபட்டு திட்டமிட்டு சதிகள் செய்து பாரத நாட்டை இஸ்லாமிய நாடாக மத மாற்ற முயற்சிப்பதாக தகவல்கள் வருகின்றன.

மறுபக்கம் திட்டமிட்டு இந்துக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாற்றியதோடு கிரிப்டோ கிறிஸ்தவர்களாக வலம் வரச்செய்து பாரத நாட்டில் வரும் வளர்ச்சி திட்டங்களை எதிர்ப்பதும் அந்நிய சக்திகளிடம் கூட்டு சேர்ந்து பாரத நாட்டை இழிவு படுத்தும் வேலைகளில் ஈடுபடுவது யாவரும் அறிந்ததே. ஆனால் லண்டன் அமெரிக்கா பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பாதிக்கப்படும்போது கிறிஸ்துவ நாடுகளும் அதன் தலைவர்களும் கூக்குரல் இடுவதும்.
பங்களாதேஷ் போன்ற முஸ்லிம் நாடுகளில் கிறிஸ்துவ மதமாற்றத்தால் ஏற்படும் பாதிப்பால் “குய்யோ முறையோ” என்று முஸ்லிம் நாடுகளும் அதன் தலைவர்களும் கூப்பாடு போடுவதும் உங்களுக்கு வந்தா மட்டும் தக்காளி சட்னியா என்ற காமெடி தான் நினைவுக்கு வருகிறது.
பாரத நாட்டை ரோம் கட்டுப்பாட்டில் கொண்டுவர இங்கிருக்கும் அந்நிய கைகூலிகளுடன் கூட்டுச் சேர்ந்து உலகளாவிய மிஷனரிகள் வேலை செய்கின்றன.

பாரத நாட்டை இஸ்லாமிய நாடாக மாற்ற உலகளாவிய இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள் வேலை செய்கின்றன.

திட்டமிட்டு பாரத நாட்டை கபளீகரம் செய்யத்துடிக்கும் பிரிவினைவாதம் மற்றும் மதமாற்ற சக்திகளிடம் சிக்காமல் பாரத நாட்டில் உள்ள இந்துக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *