இதுக்கு ஒரு முடிவே கிடையாதா?! ரப்பா.. ரப்பா.. டிஷ்.. புஷ்.. பாதிரியாரின் காமெடி!

இதுக்கு ஒரு முடிவே கிடையாதா?! ரப்பா.. ரப்பா.. டிஷ்.. புஷ்.. பாதிரியாரின் காமெடி!

Share it if you like it

கிறிஸ்தவ மக்களை தொடாமலே கீழே வைத்த கிறிஸ்தவ பாதிரியாரின் காணொளி ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

படிப்பறிவு இல்லாத மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொள்வது. மாற்று மதத்தவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு திருப்புவதே மிஷநரிகளின் வேலை என்பது பலரின் கருத்து. அதனை மெய்ப்பிக்கும் வகையில், கிறிஸ்தவ பாதிரியார்கள் செய்யும் அட்டூழியங்கள், அடாவடிகள் தொடர்கதையாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஏசுவை நம்பினால் குருடர்கள் பார்ப்பார்கள், செவிடர்கள் கேட்பார்கள், மாற்றுத் திறனாளிகள் நடப்பார்கள் என, அப்பாவி மக்களை கிறிஸ்த பாதிரியார்கள் நம்ப வைத்து ஏமாற்றி வருகின்றனர்.

அந்த வகையில், பரிசுத்த ஆவி எனும் பெயரில் சென்னையில் கிறிஸ்தவ சபையை நடத்தி வருபவர் ஜெஃப்ரி. இவரின், ஜெப வலிமையின் மூலம் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தையும், நோயோடு வருபவர்களை இவர் தொட்டால் நோய் ஓடி விடும் என இவரது ஆதரவாளர்கள் பல கட்டு கதைகளை அள்ளி விடுகின்றனர். இதனை, நம்பி இவரது சபைக்கு ஏராளமான மக்கள் செல்கின்றனர். இந்த நிலையில் தான், பாதிரியார் ஜெஃப்ரி புது விதமான முயற்சி ஒன்றினை தற்போது கடைபிடிக்க துவங்கி இருக்கிறார்.

அதாவது, சபைக்கு வந்த அப்பாவி மக்களை பார்த்து இவர் டிஷ்.. புஷ்… குஷ்.. என்று தனது கையை உயர்த்தி கத்துகிறார். இதனை தொடர்ந்து, மின்சாரம் தாக்கியது போல மக்கள் சுருண்டு கீழே விழுந்து புரள்கின்றனர். இக்காணொளி, தற்போது இணையத்தில் வைரலாக துவங்கி இருக்கிறது. இதுபோன்ற போலி கிறிஸ்தவ பாதிரியார்களின் முகத்திரையை கிழிக்கும் விதமாக தான் அண்மையில் வெளியான திரைப்படம் ’நிலைமறந்தவன்’ என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it