பாஜகவிடம் தோற்றதால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் : காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் !

பாஜகவிடம் தோற்றதால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் : காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் !

Share it if you like it

கேரளாவில் உள்ள முக்கிய தொகுதிகளில் ஒன்றான திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளரான நடிகர் சுரேஷ் கோபி சுமார் 71,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
கம்யூனிஸ்ட்களின் கோட்டை என்று இருந்த கேரளாவில் பாஜக முதல் வெற்றி பெற்று கேரளாவில் பாஜக கால் பதித்தது.

இந்நிலையில் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போன காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன், காங்கிரஸ் அங்கு தோல்வி அடைந்ததற்கு அவரே பொறுப்பு ஏற்றுக்கொண்டு, இனி எந்த தேர்தலிலும் தான் போட்டியிட போவதில்லை என அதிரடியாக தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *