20 நபர்கள் உயிரிழப்பு : அகஸ்டினுக்கு சம்மன் : தமிழகத்தை அதிர வைத்த பகீர் சம்பவம் !

20 நபர்கள் உயிரிழப்பு : அகஸ்டினுக்கு சம்மன் : தமிழகத்தை அதிர வைத்த பகீர் சம்பவம் !

Share it if you like it

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே அனுமதி இல்லாமல் நடத்தப்பட்டு வந்த மனநல காப்பகத்தில் 20 நபர்கள் இறந்து விட்டதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பெயரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கூடலூர் அருகே உள்ள குந்தலாடி பகுதியில் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் மருத்துவர் அகஸ்டின் என்பவர் ‘love share’ என்ற பெயரில் மனநல காப்பகம் ஒன்றை நடத்தி வந்ததாகவும், இதில் 20-க்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாகவும் பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கூடலூர் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் நேற்று அந்த காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

தற்போது அந்த காப்பகத்தில் 19 நபர்கள் உள்ள நிலையில், அவர்களை மீட்டு கோவையில் உள்ள காப்பகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்று சேர்ப்பதாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி, கோட்டாட்சியர் செந்தில்குமார், பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், மனநல மருத்துவர்கள் விவேக் மற்றும் தேவாலா, துணை கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பிரவீனா தேவி, மாற்றுத்திறனாளிகள் துறை அதிகாரிகள் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 20 நபர்கள் எப்படி இறந்தார்கள் என்றும், இயற்கை மரணம் தானா என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.அனுமதி இல்லாமல் நடத்தப்பட்டு வந்த மனநல காப்பகத்தில் 20 நபர்கள் இறந்து விட்டதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பெயரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காப்பக உரிமையாளர் அகஸ்டின் உட்பட 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *