இந்திய அரசிலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் சட்டமேதை அண்ணல் அம்பேத்கார். இந்நிலையில் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள 19 அடி உயர அண்ணல் அம்பேத்கர் சிலை, வரும் அக்டோபர் 14 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இச்சிலைக்கு சமத்துவ சிலை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கார் சிலைகளில் மிக உயரமான சிலை இதுவாகும்.