இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் | பார்டர் – கவாஸ்கர் கோப்பை

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் | பார்டர் – கவாஸ்கர் கோப்பை

Share it if you like it

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் பார்டர்-கவாஸ்கர் கோப்பை

          பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்தது. முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்னதாக ஒரு மாத காலத்திற்கு ஆஸ்திரேலிய அணி தரப்பிலிருந்து இந்தத் தொடரை வெல்வதற்கு நாங்கள் திட்டம் வைத்திருக்கிறோம் – என்ற செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அஷ்வினைப் போல சுழல் பந்து வீசக்கூடிய மஹேஷ் பித்தியா என்ற பரோடா வீரரைக் கொண்டு வந்து ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெங்களூரில் பயிற்சி செய்தனர்.

நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் (9.02.2023 -11.02.2023)

          நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் லபுசேன் 49 ரன், ஸ்மித் 37 ரன் எடுத்தனர். இந்திய அணியின் ஜதேஜா 47 ரன் கொடுத்து 5 விக்கட்டுகளையும் அஷ்வின் 42 ரன்கள் கொடுத்து மூன்று விக்கட்டுகளையும் எடுத்தனர். இந்திய அணி தனது முதல் இன்னிங்க்ஸில் 400 ரன் எடுத்தது. ரோஹித் ஷர்மா 120 ரன், ரவீந்தர் ஜதேஜா 70 ரன், அக்சர் படேல் 84 ரன், ஷமி 37 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியின் மர்பி 124 ரன் கொடுத்து ஏழு விக்கட் எடுத்தார். ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்க்ஸில் 32.3 ஓவரில் 91 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்மித் ஆட்டமிழக்காமல் 25 ரன், லபுசேன் 17 ரன். வார்னர் 10 ரன், கேரீ 10 ரன் எடுத்தனர். அஷ்வின் 37 ரன் கொடுத்து ஐந்து விக்கட்டுகளையும் ஷமியும் ஜதேஜாவும் தலா இரண்டு விக்கட்டுகளையும் அக்சர் படேல் ஒரு விக்கட்டும் எடுத்தார். இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை ஒரு இன்னிங்க்ஸ் 132 ரன்களில் வெற்றி பெற்றது.

டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் (17.02.2023-19.02.2023)

          போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில் 263 ரன் எடுத்தது. இந்த அணியின் க்வாஜா 82, ஹேண்ட்ஸ்கோம்ப் 72* எடுத்தனர். இந்திய அணியின்  ஷமி 4-60, அஷ்வின் 3-57, ஜடேஜா 3-68. இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 261 ரன் (அக்சர் படேல் 74, கோலி 44, அஷ்வின் 37, ரோஹித் 32). ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் 113 ரன் (ஹெட் 43, லபுசேன் 35, ஜதேஜா 7/42, அஷ்வின் 3/59). இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் 118/4 (ரோஹித் ஷர்மா 31, புஜாரா 31*, கோலி 20, பரத் 23*, லியன் 2/49). இந்திய அணி ஆறு விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூன்றாவது டெஸ்ட், இந்தூர் (01.03.2023 – 03.03.2023)

          முதல் இரண்டு போட்டிகளிலும் ஆட்டக்களம் சுழல்பந்து வீச்சிற்குச் சாதகமாக அமைக்கப்பட்டிருந்தது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். மூன்றாவது டெஸ்ட் தர்மசலாவில் நடக்கவிருந்தது. ஆயினும் வானிலை காரணமாக ஆட்டக்களம் சரியாகத் தயாராகவில்லை என்பதால் இந்தூரில் போட்டி நடத்தப்பட்டது. இந்தூர் ஆட்டக்களமும் சுழல் பந்து வீச்சிற்கு சாதகமான களமாக இருக்கும் என்று குறை சொல்லப்பட்டது. இந்த டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்னுக்கு  ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் 163 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டவது இன்னிங்க்ஸில் புஜாரா 59 ரன், ஷ்ரேயாஸ் ஐயர் 26 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலியாவின் நாதன் லியன் 64 ரன் கொடுத்து 8 விக்கட்டுகள் எடுத்தார். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ் 197 ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் க்வாஜா 60, லபுசேன் 31, ஸ்மித் 26 ரன் எடுத்தனர். இந்திய அணியில் ஜதேஜா, அஷ்வின், உமேஷ் யாதவ் முறையே 4, 3, 3 விக்கட்டுகள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் ஒரு விக்கட் இழப்பிற்கு 78 ரன் எடுத்து இந்திய அணியை 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

நான்காவது டெஸ்ட், அகமதாபாத் (9.03.2023 – 13.03.2023)

          அகமதாபாத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்சில் 167.2 ஓவர்கள் விளையாடி 480 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது. (உஸ்மான் க்வாஜா 180, கிரீன் 114, மர்ஃபி 41, ஸ்மித் 38, நாதன் லியன் 34, ஹெட் 32, அஷ்வின் 6/91, ஷமி 2/134, ஜதேஜா 1/49, அக்சர் படேல் 1/47). இரண்டாவது இன்னிங்க்ஸில் 78.1 ஓவர் விளையாடி இரண்டு விக்கட் இழப்பிற்கு 175 ரன்னிற்கு ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.

          இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 178.5 ஓவர்கள் விளையாடி 571 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனதுஅ(கோலி 186, கில் 128, அக்சர் படேல் 79, ஜதேஜா 44, புஜாரா 42, ரோஹித 35,  லியன் 3/151, மர்பி 3/113, ஸ்டார்க் 1/97). ஆட்டம் ட்ராவில் முடிந்தது.

          தங்கள் அணி தோற்றுப் போனதால் முதல் இரண்டு டெஸ்டுகளின் ஆட்டக்களத்தை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் பலர் குறை சொன்னார்கள். மூன்றாவது டெஸ்டில், இந்தூர் ஆட்டக்களமும் முதலிரண்டு மைதானங்களின் ஆட்டக்களம் போலத்தான் இருந்தது. இருப்பினும் ஆஸ்திரேலியா வென்றதால் பெரிய விமர்சனம் எழவில்லை. அகமதாபாத் ஆட்டக்களம் பந்துவீச்சாளர்களுக்கு எந்த வித உதவியும் செய்யவில்லை. இரண்டு அணிகளும் இன்னும் ஐந்து நாட்களுக்குக் கூட ஆடியிருப்பார்கள். அப்படி ஒரு உயிரற்ற ஆட்டக்களம். இதற்கு விமர்சகர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் எனத் தெரியவில்லை.

          இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றது. ஆட்ட நாயகனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகன்களாக அஷ்வினும் ஜதேஜாவும் அறிவிக்கப்பட்டனர்.

          இந்திய அணி இந்தப்போட்டியிலும் வென்றால் உலகக்கோப்பை டெஸ்ட் பொட்டியில் விளையாடத் தகுதி பெறும் என்ற நிலையில் இருந்தது. ஆஸ்திரேலிய அணி இதற்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. ஆனால் இன்று மதியம் இரண்டு மணி போல நியூசிலாந்து இலங்கை அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதாக செய்தி வந்துவிட்டது. இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தால் இந்தியா உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குச் செல்வதில் சந்தேகம் அடுத்த நியூசிலாந்து இலங்கை போட்டியின் முடிவு வரை நீடித்திருக்கும். ஆனால் இலங்கை இன்று தோற்றதால் இந்தியா இறுதிப் போட்டிக்குச் செல்கிறது.

          இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகின்ற ஜூன் 7ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3. 30க்குத் தொடங்கும். அதாவது ஐபிஎல் போட்டிகளின் ஃபைனல் முடிவடைந்த பிறகு போட்டி நடக்கும்.

புள்ளிவிவரம்

          ஆஸ்திரேலியாவின் உஸ்மான் க்வாஜா நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஏழு இன்னிங்க்ஸ் விளையாடி 333 ரன் எடுத்திருந்தார். விராட் கோலி ஆறு இன்னிங்க்ஸில் 297 ரன் எடுத்தார்.  அக்சர் படேல் அதிக சிக்சர் அடித்த வீரர் ஆவார். அதிக ரன்கள் எடுத்த வீரர் விராட் கோலி.அவர் எடுத்த அதிக பட்ச் ரன் 186. அதிகாளிவில் 50க்கும் மேற்பட்ட் ரன் அடித்தவர் அக்சர் படேல் மூன்று ஐம்பதுகள்.

அதிக விக்கட்டுகள் எடுத்தவர்கள் அஷ்வின் 25, ஜதேஜா 22, நாத லியான் 22. சிறப்பான பந்துவீச்சு லியன் 8/64, ஜதேஜா 7/42. அதிக கேட்சுகள் பிடித்தவர் இந்திய விக்கட் கீப்பர் பரத், பிடித்த கேட்சுகள் 7

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்


Share it if you like it