தெலுங்கு திரைப்பட உலகின் புகழ்பெற்ற இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கிய ‘பாகுபலி’ படத்தின் பிரமாண்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஆர்.ஆர்.ஆர். (RRR). அதாவது, ரத்தம் ரணம் ரௌத்திரம் இதன் சுருக்கம்தான் படத்தின் தலைப்பு. இப்படத்தில், இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் அனைவரையும் கவர்ந்து இருந்தது. இப்படிப்பட்ட சூழலில், அப்படத்தின் பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாரதப் பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.