சர்வதேச அளவில் 81 கோடி பேர் போதிய உணவில்லாமல் தவித்து வருகின்றனர். 44 கோடி பேர் பட்டினியால் துன்படுகிறார்கள். 200 கோடி பேர் சுகாதார வசதியில்லாமல் உள்ளனர். 9-ல் ஒருவர் பசியாலும், 3 பேரில் ஒருவர் ஊட்டசத்து குறைப்பாட்டாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் வறுமையை ஒழித்து மக்களை காப்பாற்றும் விதமாக இன்று ‘சர்வதேச வறுமை ஒழப்பு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. ஒருபுறம் உணவு கிடைக்காமல் மக்கள் துன்பப்பட்டு வரும் நிலையில் மறுபுறம் உணவு மற்றும் தானியங்கள் வீணாக்கப்டுவருகின்றன. இதை தவிர்த்து அனைவருக்கும் உணவுக் கிடைக்க வழி செய்து வறுமையை ஒழிக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.