போதையில் ரகளை : அக்னிசிறகின் அட்ராசிட்டி !

போதையில் ரகளை : அக்னிசிறகின் அட்ராசிட்டி !

Share it if you like it

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் இரண்டு பெண்கள் ஒருவரை தாக்கும் காணொளியானது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தின் முன்புற பகுதியில் போதை ஆசாமி ஒருவர் குடித்து விட்டு கீழே விழுந்து கிடந்துள்ளார்,அப்போது அங்கு வந்த இரண்டு பெண்கள் அவரிடம் பணம் பறிக்க முயன்றுள்ளனர். இதனை போதை ஆசாமி சுதாரிக்கவே அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி அந்த இரண்டு பெண்கள் கோபமடைந்து மது போதையில் இருந்த நபரை தாறுமாறாக தாக்கினர், தாக்குதலுக்கு உள்ளான நபர் மது போதையில் இருந்ததால் அவரால் எழுந்து நடக்க முடியாத நிலையில் இரண்டு பெண்களும் மாறி மாறி அவரை சரமாரியாக தாக்கினர். அந்த பெண்களும் குடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை பயணி ஒருவர் வீடியோ பதிவு செய்தார். அவரையும் அந்த பெண்கள் மிரட்டினார். இதனை அருகில் இருந்த பேருந்து ஓட்டுநர்கள் பயணிகள் யாரும் இந்த இரண்டு பெண்களை தடுக்கவில்லை.
இந்த தாக்குதல் சம்பவம் நடைபெறும் இடத்திற்கு 100 மீட்டர் தூரத்தில் தான் பேருந்து நிலையத்தின் உட்புறத்தில் உள்ள புறக்காவல் நிலையம் செயல்படுகிறது. திடீரென பேருந்து நிலையத்திற்குள் வைதிகள் கூட்டம் கூடி தாக்குதல் சம்பவம் நடைபெறுவதை அறிந்தவுடன் அங்கு வந்த போலீசார் மது போதையில் இருந்த நபரை அங்கிருந்து மீட்டும்,போதை ஆசாமியையும் சரமாரியாக தாக்கிய இரண்டு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களையும்போலீசார் விசாரணைக்காக தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் இரண்டு பெண்கள் சேர்ந்து மது போதையில் இருந்த போதை ஆசாமியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *