அரசு அதிகாரி கையில் அருவா ? சபாஷ்…!….இதுதாண்டா திராவிட மாடல் !

அரசு அதிகாரி கையில் அருவா ? சபாஷ்…!….இதுதாண்டா திராவிட மாடல் !

Share it if you like it

கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட, புத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். இவர் தன் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். கடந்த 29-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் வந்த அந்த வளர்ப்பு நாய், தெருவில் உள்ள மற்றொரு நாயைப் பார்த்து குரைத்திருக்கிறது. பதிலுக்கு அந்த நாயும் வளர்ப்பு நாயைப் பார்த்து குரைத்திருக்கிறது. இந்த நிலையில் கொளஞ்சியப்பன் வீட்டருகே வசித்து வரும் கள்ளக்குறிச்சி மண்டல துணை வாட்டாட்சியர் சிலம்பரசனை, அந்த நாய்களின் சத்தம் எரிச்சலூட்டியிருக்கிறது. அதனால் சிலம்பரசன் அந்த இரண்டு நாய்களையும் துரத்திச் செல்ல, அவை கொளஞ்சியப்பன் வீட்டுக்குள் சென்றுவிட்டன. அதையடுத்து தன் வீட்டிற்கு வேகமாக திரும்பிச் சென்ற சிலம்பரசன், கையில் அரிவாளை எடுத்துக் கொண்டு கொளஞ்சியப்பன் வீட்டுக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு பெண்ணும், சிறுமியும், வேண்டாம் விட்டு விடுங்கள் என்று சிலம்பரசனை தடுத்துள்ளனர்.

அதையும் மீறி கொளஞ்சியப்பன் வீட்டு வாசலுக்குச் சென்ற சிலம்பரசன், நாயை கட்டிப் போட்டு வளர்க்கத் தெரியாமல் ஏன் நாயை வளர்க்கிறீர்கள் ?’ என்று கோபமாக திட்டியதுடன்,இந்த அரிவாளாலே நாயை வெட்டிப் போட்டு விடுவேன்’ என்றார். மேலும் `அந்த நாயை நான் வெட்டாமல் விடமாட்டேன் என்று ஆவேசமாக பேசினார். அந்த நாய் இனி உங்கள் வீட்டில் இருந்தால் நீங்கள் யாரும் இருக்க முடியாது’ என்று கையில் அரிவாளுடன் ஆக்ரோஷமாக மிரட்டினார். அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவான இந்த காட்சிகள், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதற்கிடையில், “எங்கள் வீட்டின் வளர்ப்பு நாய் தெருவில் சென்றபோது அதனை துரத்திக் கொண்டு வந்த சிலம்பரசன், கையில் அரிவாளுடன் எங்கள் வீட்டில் அத்துமீறி நுழைந்து, எங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். அவரால் எங்கள் குடும்பத்தினரின் உயிர் ஆபத்தில் இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் கொளஞ்சியப்பன்.

இவ்வாறு புகார் அளித்தாலும் அவர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்யமாட்டார்கள். ஏனென்றால் அவர் அரசு அதிகாரி. தமிழகத்தில் திராவிட ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அரசு பதவியில் இருந்தால் போதும் அவர்கள் விருப்பத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலம் என்று நினைத்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் இரண்டு கொம்புகள் முளைத்திருப்பது போல் நடந்து கொள்கின்றனர். இவர்களை எல்லாம் கடுமையாக தண்டிக்க வேண்டும். இவ்வாறு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *