பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்தே இதற்கா ? அதிரடி காட்டிய மோடி !

பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்தே இதற்கா ? அதிரடி காட்டிய மோடி !

Share it if you like it

விவசாயிகளுக்கான நிதி வழங்கும், PM KISAN FUND திட்டத்தின் கீழ், 9.3 கோடி விவசாயிகளுக்கு ₹20,000 கோடி நிதியை விடுவிக்க முதல் கையெழுத்திட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

டெல்லியில் உள்ள அலுவலகத்தில் முறையாக பிரதமராக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி. இந்த நிலையில் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, பிரதமர் கிசான் நிதியின் 17வது தவணையை வெளியிடுவதற்கான தனது முதல் கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.

இதன் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் மற்றும் சுமார் 20,000 கோடி ரூபாய் வழங்கப்படும். கோப்பில் கையெழுத்திட்ட பிறகு, பிரதமர் மோடி, “எங்கள் அரசு விவசாயிகளின் நலனுக்காக முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளது.

எனவே பொறுப்பேற்றவுடன் கையெழுத்திடப்பட்ட முதல் கோப்பு விவசாயிகள் நலன் தொடர்பானது என்பது பொருத்தமானது. வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் விவசாயத் துறைக்கு இன்னும் அதிகமாக செய்ய விரும்புகிறோம்.” என்று தெரிவித்தார்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *