மதமாற்றி கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு விரட்டி அடித்த இஸ்மாயில் : பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க புகார் !

மதமாற்றி கொடுமைப்படுத்தி வீட்டை விட்டு விரட்டி அடித்த இஸ்மாயில் : பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க புகார் !

Share it if you like it

திருச்சியில் தன்னை மதமாற்றி கொடுமைப்படுத்தியதாக பெண் ஒருவர் முதல்வர் தனிப்பிரிவிற்கு பகிரங்க புகார் அளித்துள்ள நிகழ்வானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் பாலகரையை சேர்ந்தவர் சங்கீதா. கணவரை இழந்த இவரை இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இஸ்மாயில் என்பவர் பெண் கேட்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து சங்கீதாவையும் சங்கீதாவையும் அவர் முதல் கணவருக்கு பிறந்த குழந்தையையும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி திருமணம் செய்துகொண்டார். இவ்வாறு மதமாற்றிய பிறகு தனது கணவரின் தாய் இவரை தரக்குறைவாக பேசி கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரட்டை சிசுவை கருவில் சுமந்திருந்த சங்கீதாவை அவருடைய கணவரும் கணவரின் தாயாரும் சேர்ந்து வீட்டை விட்டு விரட்டி அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதனால் கருவில் இருந்த இரு சிசுக்கள் கலைந்ததாக கண்ணீர் மல்க கூறினார்.

பணத்திற்காக பல பெண்களை திருமணம் செய்து இஸ்மாயில் விவாகரத்து செய்ததாக கூறி தனது கணவர் இஸ்மாயில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆதாரப்பூர்வமாக முதல்வரின் தனிப்பிரிவில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார் சங்கீதா.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *