துண்டு துண்டாக வெட்டி பெண் கொலை: ஷபீர் அகமது வானி கைது!

துண்டு துண்டாக வெட்டி பெண் கொலை: ஷபீர் அகமது வானி கைது!

Share it if you like it

டெல்லியில் ஷ்ரத்தாவை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டியது போல் ஜம்மு காஷ்மீரிலும் ஒரு சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புட்காம் மாவட்டம் சோய்பக் பகுதியைச் சேர்ந்தவர் தன்வீர் அகமது கான். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஷபீர் அகமது வானி. தச்சுத் தொழிலாளி. இருவரும் நண்பர்கள். இந்த அடிப்படையி்ல் தன்வீர் வீட்டிற்கு அடிக்கடி வந்து போயிருக்கிறார் ஷபீர். அப்போது, தன்வீரின் சகோதரி ஆரிஃபாவுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்பெண்ணை ஷபீர் ஒருதலையாகக் காதலித்திருக்கிறார். இதற்கு ஆரிஃபா சம்மதிக்காததால், அவரது குடும்பத்தினரிடமே நேரடியாக பெண் கேட்டிருக்கிறார். ஆனால், தச்சு வேலை செய்வதை காரணம் காட்டி, அவர்களும் மறுத்து விட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஷபீர், கடந்த 8-ம் தேதி கோச்சிங் கிளாஸுக்குச் சென்ற ஆரிஃபாவை கடத்திச் சென்று, தனது வீட்டில் வைத்து கொலை செய்திருக்கிறார். பின்னர், டெல்லி பெண் ஷ்ரத்தாவைப் போல, ஆரிஃபாவையும் துண்டு துண்டாக வெட்டி ஓம்பூரா என்கிற பகுதியில் பல்வேறு இடங்களில் வீசி விட்டுச் சென்றிருக்கிறார். இதனிடையே, கோச்சிங் கிளாஸுக்குச் சென்ற சகோதரியைக் காணாததால், பதட்டமடைந்த தன்வீக் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ஷபீர் அகமது வானி பெண் கேட்ட விவரத்தை தன்வீர் சொல்லி இருக்கிறார்.

மேலும், ஆரிஃபாவின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, ஆரிஃபாவின் செல்போனுக்கு கடைசியாக ஷபீர் போன் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஷபீர் அகமது வானியை போலீஸார் பிடித்து விசாரித்தனர். ஷபீர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் முறைப்படி விசாரித்தனர். இதன் பிறகுதான், ஆரிஃபாவை கொலை செய்து பல துண்டுகளாக வெட்டி வீசியதை ஒப்புக்கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து, ஷபீரை கைது செய்து வாக்குமூலத்தை பெற்ற போலீஸார், ஆரிஃபாவின் உடல் பாகங்களை மீட்டதோடு, ஷபீரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் இறுதி ஊர்வல காட்சிகள்…


Share it if you like it