கரூர் எம்.பி. ஜோதிமணி மாவட்ட ஆட்சியரை கண்டித்து போராட்டம்.
அ.தி.மு.க ஆட்சியில் இருந்த பொழுது அடிமை அரசு, செயல்படாத அரசு, என தனது எண்ணத்தையும், கோவத்தையும், தொடர்ந்து டுவிட்டரில் வெளிப்படுத்தி வந்தவர் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி. ஆனால் விடியல் ஆட்சியில் நிகழும் அட்டூழியங்கள், அடாவடிகள், பற்றி எல்லாம் வாய் திறக்காமல் தொடர்ந்து கள்ள மெனமாக இருப்பது, பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் பற்றி மட்டுமே பேசுவது என தனது கொள்கையில் இன்று வரை உறுதியாக இருந்து வந்த ஜோதிமணி அவர்கள் கரூர் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக போராட்டம் நடத்தி இருப்பது 200 நாட்களுக்கு மேல் நல்லாட்சி நடத்தி வரும் தி.மு.க-வை சீண்டும் செயல் இது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.