கள்ளக்குறிச்சி கொடூரம் – அமைதிகாக்கும் கழக தொலைக்காட்சி மற்றும் அரசியல்வாதிகள்.

கள்ளக்குறிச்சி கொடூரம் – அமைதிகாக்கும் கழக தொலைக்காட்சி மற்றும் அரசியல்வாதிகள்.

Share it if you like it

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு அருகில் உள்ள தேவியானந்தல் எனும் கிராமத்தைச் சார்ந்த நர்சிங் மாணவி சரஸ்வதியும், அதேஊரைச் சார்ந்த ரங்கசாமியும் இரண்டுஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ரங்கசாமி வேறு சமூகம்என்பதால், அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சரஸ்வதிக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்துள்ளனர் சரஸ்வதியின் பெற்றோர்கள்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதியன்று சரஸ்வதி அவரது வீட்டின் பின்புறம் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்

அவரை கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக பிரேதப் பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து தலைமறைவான ரங்கசாமியை காவல்துறையினர், ஆந்திர மாநில எல்லையில் அவரது நண்பருடன் கைது செய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக இந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் வழக்கமாக பெண்ணுரிமை, பெண்கள் பாதுகாப்பு, பெண்ணியம் பேசும் கருப்புச்சட்டை அரசியல்வாதிகள் இந்த கொலையை இதுவரை கண்டிக்காதது ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Share it if you like it