மகளை தாயாக்கிய மதரஸா ஆசிரியருக்கு 3 ஆயுள் தண்டனை!

மகளை தாயாக்கிய மதரஸா ஆசிரியருக்கு 3 ஆயுள் தண்டனை!

Share it if you like it

கேரளாவில் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பிணியாக்கிய மதரஸா ஆசிரியருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்திருக்கிறது.

கேரள மாநிலம் மலப்புரம் பகுதி வழிக்கடவு காவல் நிலையப் பகுதியில் திருக்குரான் மற்றும் அரபி மொழியை பயிற்றுவிக்கும் மதரஸா பள்ளிக்கூடம் இருக்கிறது. இங்கு ஆசிரியராக பணியாற்றி வந்தவர் இஸ்மாயில் (பெயர் மாற்றம்). இவருக்கு மனைவி மற்றும் 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார்கள். இஸ்மாயில் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. மதரஸாவில் பாடம் சொல்லிக் கொடுக்கும் நேரம் தவிர, இதர நேரங்களில் மதுபோதையிலேயே இருப்பாராம். அதேபோல, தினமும் குடித்துவிட்டு வந்து மனைவிடம் தகராறு செய்வதையும் வழக்கமாக வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள்.

இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதன் பின்னர், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆகவே, இஸ்மாயிலின் மகளும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் படித்து வந்தார். இந்த சூழலில், கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் குடிபோதையில் வீட்டுக்கு வந்திருக்கிறார் இஸ்மாயில். அப்போது வீட்டில் மனைவி உட்பட யாரும் இல்லை. அதேசமயம், அவரது மகள் மட்டும் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பாடம் படித்துக் கொண்டிருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட இஸ்மாயில், தனது மகளையே பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதற்கு மகள் உடன்பட மறுத்து எதிர்ப்புத் தெரிவிக்கவே, தாயை கொன்று விடுவதாக மிரட்டி இருக்கிறார் இஸ்மாயில். இதனால் வேறு வழியின்றி அச்சிறுமியும் உடன் பட்டிருக்கிறார். ஆனால், அதன் பிறகும் அச்சிறுமியை விடவில்லை, அந்த காமுக மிருகம். தாயை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி மிரட்டியே கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.

இந்த சூழலில், 2021 அக்டோபர் மாதம் பள்ளிகள் திறக்கவே, அச்சிறுமி பள்ளிக்குச் சென்றிருக்கிறார். அப்போது, நவம்பர் மாதம் திடீரென சிறுமி வயிற்று வலியால் அலறித் துடித்திருக்கிறார். அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது, சாதாரண வயிற்று வலி என்று கூறி மருந்து மாத்திரைகளை கூறி அனுப்பி விட்டார்கள். பின்னர், 2022 ஜனவரி மாதம் மீண்டும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. அப்போது, அவரது தாய் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டி இருக்கிறார். இதில்தான், சிறுமி கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரியவந்தது.

இதையடுத்து, அச்சிறுமியிடம் விசாரித்தபோது, தனது தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த கொடுமையைச் சொல்லி அழுதிருக்கிறார். பின்னர், அச்சிறுமிக்கு டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டதில், சிறுமியை கர்ப்பமாக்கியது அவரது தந்தைதான் என்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தாய், மகள் ஆகியோரின் வாக்குமூலத்தின்படி போக்ஸோ சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மதரஸா ஆசிரியர் இஸ்மாயிலை கைது செய்தன்.

இதுதொடர்பான வழக்கு கேரள மாநிலம் மஞ்சேரி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில்தான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தீர்ப்புக் கூறப்பட்டது. அத்தீர்ப்பில், பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு 3 ஆயுள் தண்டனையும், 6.6 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் குற்றவாளி வெளியே வந்து சாட்சிகளை அழித்து விடக் கூடாது என்பதற்காக, வழக்கை துரிதமாக நடத்தியதாக போலீஸார் தெரிவித்தனர். எப்படியோ ஒரு காமுக மிருகத்துக்கு சரியான தண்டனை கிடைத்திருக்கிறது.


Share it if you like it