பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை : மற்றொரு மேற்கு வங்கமாக மாறுகிறதா தமிழகம் ?

பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை : மற்றொரு மேற்கு வங்கமாக மாறுகிறதா தமிழகம் ?

Share it if you like it

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமணமான 45 வயது பெண் ஒருவர் தனது மகளின் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.

அப்பொழுது அவ்வழியாக சென்ற பிரவீன், ராஜ்கபூர் இருவரும் இருச்சக்கர வாகனத்தில் வந்துள்ளனர். பேருந்துக்காக காத்திருந்த அந்த பெண்ணிடம் லிஃப்ட் கொடுப்பதாக கூறி ஒரு பைக்கில் அழைத்துக்கொண்டு சென்று, அந்த ஊரைத் தாண்டியதும், பிரவீன் மற்றும் ராஜ்கபூர் இருவரும் சேர்ந்து ஆள் இல்லாத வயல் பகுதிக்கு அப்பெண்ணை அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து பெண் கூச்சலிட்டுள்ளார். அவரை தாக்கி விட்டு, பிரவீன், ராஜ்கபூர் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்நிலையில், வீட்டிற்கு வருவதாக கூறி, தனது அம்மா வெகுநேரமாகியும் வரவில்லை என்பதால், அந்த பெண்ணின் மகள் தனது தம்பியை விட்டு தேடிவர சொல்லியுள்ளார். அவர் தேடி வரும் போது வழியில் அப்பெண் அழுதுக்கொண்டு இருப்பதை பார்த்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அந்த இளைஞர் வருவதை பார்த்து பிரவீன், ராஜ்கபூர் இருவரும் தப்பியோடியுள்ளனர். இது குறித்து பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரவீன், ராஜ்கபூர் இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *