அட கொளத்தூர் மணியா இப்படி பேசினது!

அட கொளத்தூர் மணியா இப்படி பேசினது!

Share it if you like it

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, இஸ்லாமும் பெண்களும் என்ற தலைப்பில் பேசியுள்ளார். இவர், அம்மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை கண்டித்து பேசியுள்ளார். தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

பொதுவாக திராவிடர் கழத்தை சேர்ந்தவர்கள், ஹிந்து மதம் மற்றும் ஹிந்துக்களின் உணர்வுகளை, தொடர்ந்து புண்படுத்தி பேசக்கூடியவர்கள். அதிலும் குறிப்பாக, வீரமணி, சுப.வீரபாண்டியன் மற்றும் கொளத்தூர் மணி, போன்றவர்கள் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ய கூடியவர்கள். இதுதவிர, கிறிஸ்தவ மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள் மற்றும் தேசத்திற்கு விரோதமாக பேசும் நபர்களிடம் நெருங்கிய நட்பை கொண்டவர்கள், இவர்கள் என்பது பலரின் குற்றச்சாட்டு. மேலும், தி.மு.க.வின் வாக்கு வங்கியாக இருக்கும், சிறுபான்மை மக்களின், மத உணர்வுகளை எந்தவிதத்திலும், இந்த தோழர்கள் காயப்படுத்துவதில்லை. அதே போல, அம்மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் குறித்து என்றுமே இவர்கள் பேசுவதில்லை. அந்த வகையில், தி.மு.க.வின் ஊதுகுழலாக இருப்பவர், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி. இவர், தற்பொழுது இஸ்லாமிய மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை கண்டித்து பேசியுள்ளார். இதுதான், தற்பொழுது பேசு பொருளாக மாறியுள்ளது. இது நிச்சயம் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதன் லிங்க் இதோ.


Share it if you like it