நீ உயிரோடு வீடு திரும்ப மாட்டாய்… மணல் கடத்தலை தட்டி கேட்டவருக்கு தி.மு.க. பிரமுகர் கொலை மிரட்டல்!

நீ உயிரோடு வீடு திரும்ப மாட்டாய்… மணல் கடத்தலை தட்டி கேட்டவருக்கு தி.மு.க. பிரமுகர் கொலை மிரட்டல்!

Share it if you like it

மணல் கடத்தலை தட்டிக்கேட்டவரை, சென்னையிலிருந்து உயிரோடு திரும்ப மாட்டாய் என்று தி.மு.க. பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்திருக்கும் ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஏரி ஒன்று இருக்கிறது. தி.மு.க. வடக்கு ஒன்றியச் செயலாளர் குமரேசன் அறிவுறுத்தலின் பேரில், அவரது ஆதரவாளர்கள் மேற்கண்ட ஏரியில் இருந்து மணலை கடத்தி வந்திருக்கிறார்கள். இதை அதே ஊரைச் சேர்ந்த நடராஜன் என்பவர் தட்டிக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த குமரேசனின் ஆதரவாளர்கள், நடராஜனுக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். இதுகுறித்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் பேசும் குமரேசனின் ஆதரவாளர் கற்பூர சுந்தர பாண்டியன், “டேய் சென்னையிலிருந்து நீ உயிரோடு திரும்ப மாட்டாய். நீ வர்றதுக்குள்ள உன் வீடும் இருக்காது. நேற்றே வந்து உன் மண்டையை உடைத்திருப்போம். ஆனா, நீ அந்தளவுக்கு ஒர்த் இல்லை. மறுபடியும் சொல்றேன், நீ சென்னையிலிருந்து உயிரோடு திரும்ப மாட்டாய் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுக்கிறார். ஆடியோவை கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்…


Share it if you like it