பட்ட பகலில் இளம்பெண்ணிற்கு கத்தி குத்து : காங்கிரஸ் பிரமுகர் குல்தீப் வர்மா கைது !

பட்ட பகலில் இளம்பெண்ணிற்கு கத்தி குத்து : காங்கிரஸ் பிரமுகர் குல்தீப் வர்மா கைது !

Share it if you like it

மத்திய பிரதேச மாநிலம் கேசர்புராவை சேர்ந்த குல்தீப் வர்மா என்பவர் காங்கிரஸ் கட்சியில் இளைஞர் அணி தலைவராக உள்ளார். இவரும் போஹ்ரா பஜாரில் வசித்து வரும் 20 வயதுடைய பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண் குல்தீப் வர்மாவிடம் பேசுவதை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக கூறி அந்த பெண்ணை நீமுச் காண்ட் பகுதியில் உள்ள பூங்காவிற்கு வரவழைத்து கத்தியால் சரமாரி குத்தியுள்ளார் குல்தீப் வர்மா. பின்னர் அங்கிருந்து குல்தீப் வர்மா தப்பி சென்றுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் துடித்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் இருந்து, அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக கூறப்படுகிறது. 23 வயதான குல்தீப் வர்மா என்ற குற்றவாளியை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. . இதில் கொடுமை என்னவென்றால் கத்தியால் குத்த வந்தபோது அங்கிருந்தவர்கள் யாரும் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டும் மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டும் இருந்துள்ளனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *