சென்னையில் வழக்கறிஞர் வெட்டி கொலை : போலீசார் தீவிர விசாரணை !

சென்னையில் வழக்கறிஞர் வெட்டி கொலை : போலீசார் தீவிர விசாரணை !

Share it if you like it

தமிழகத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை, போதைப்பொருள் என நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் இந்த சம்பவங்கள் குறைந்த பாடில்லை.

இந்நிலையில் சென்னை திருவான்மியூர் தெற்கு நிழற்சாலை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த வழக்கறிஞர் கௌதம் என்பவரை மர்ம நபர்கள் சிலர் வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.

தகவலறிந்து வந்த திருவான்மியூர் போலீசார், அவரை மீட்டு அடையார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு வழக்கறிஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் கௌதமை யார் வெட்டியது, என்ன காரணம் என பல்வேறு கோணங்கலிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *