சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு சனாதனத்தை பற்றி சர்ச்சைக்குரிய முறையில் பேசினார்.இவ்வாறு உதயநிதி பேசிய சர்ச்சையான பேச்சுக்கு கொதித்தெழுந்த மக்கள் அவர்மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கில், தான் தனிப்பட்ட முறையில்தான் பேசினேனே தவிர அமைச்சர் முறையில் பேசவில்லை என்று உதயநிதி கூறியுள்ளார். ஆனால் சனாதன மாநாட்டில் ஒரு அமைச்சராக தான் கலந்துகொண்டதாக அவரே தெரிவித்துள்ளார்.
தனது பேச்சு தேர்தலில் திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிக்கும் தோல்வியை தந்துவிடுமோ என்று பயந்து தற்போது உண்மைக்கு மாறாக பொய் பேசி வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் #மண்டியிட்ட உதய் என்கிற ஹாஷ்டாக் டிரண்டாகி வருகிறது.