ஆவினுக்கு பால் ஊற்றுகிறாரா அமைச்சர் மனோ தங்கராஜ் ? நெட்டிசன்ஸ் சிலிபர்ஸாட் கேள்வி !

ஆவினுக்கு பால் ஊற்றுகிறாரா அமைச்சர் மனோ தங்கராஜ் ? நெட்டிசன்ஸ் சிலிபர்ஸாட் கேள்வி !

Share it if you like it

திமுக ஆட்சி வந்ததிலிருந்து ஆவின் நிறுவனத்தின் மீதான நம்பிக்கை, தரம் எல்லாம் அடியோடு நின்றுவிட்டது என்றே சொல்லலாம். ஏனெனில் தினசரி ஆவின் நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டுகள் வெளிவந்தம் வண்ணம் உள்ளன. இந்நிலையில்

திருச்சி மாவட்டத்தில் வாடகை பாக்கியால் ஆவின் பால் எடுத்து செல்லும் வாடகை வாகன ஓட்டுனர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த நான்கு மாதங்களாக வாடகை கொடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் இன்று ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று தான் திமுக கட்சியை சேர்ந்த பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எக்ஸ் பதிவில், மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கனிவான வழிகாட்டுதலில் கடும் வறட்சியிலும் 31 லட்சத்தை தாண்டியுள்ளது என்று சமூக வலைத்தளங்களில் கம்பு சுற்றினார். ஆனால் அடுத்த நாளே திமுக அமைச்சர் மனோ தங்கராஜிக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பி விட்டது.

சமீப காலமாக ஆவின் நிறுவனத்தின் மேல் தொடர்ந்து புகார்கள் வருவது அதிகரித்து விட்டது. தமிழ்நாடு அரசின் ஆவின் பால்பாக்கெட்டில் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “ஆவின் நிறுவனத்தின் அரை லிட்டர் (500 ml) பால் பாக்கெட்டில் 70 ml குறைத்து 430ml மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு பாக்கெட்டுக்கு 70 ml குறைகிறது என்றால், ரூ.3.08 குறைய ஒரு பாக்கெட்டுக்கு விலை குறைய வேண்டும்.

இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.2.16 கோடிக்கு மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. எனவே, வழக்கம்போல அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி தப்பிக்காமல், ஆவின் பால் பாக்கெட்டில் அளவைக் குறைத்து மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

பால்வளத்துறையின் மோசமான செயல்பாடு, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொண்ட காரணத்தால் அமைச்சராக இருந்த ஆவடி நாசரின் பதவி பறிக்கப்பட்ட புதிய பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சரை மாற்றியும் ஆவின் மீதான பிரச்னை ஓயவில்லை. ஊதா நிற புதிய பசும்பால் பாக்கெட்டை அறிமுகப்படுத்தி, பச்சை நிற பால் பாக்கெட்டுகளை குறைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த ஓராண்டில் பால் கொள்முதல் 10 லிட்டம் லிட்டருக்கும் மேல் குறைந்து போனது. இதனால் ஆவின் நிறுவனமும் கடுமையான நெருக்கடியில் சிக்கியது. ஒரு லிட்டர் பாலுக்கு ஏறக்குறைய 22 ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதை சமாளிக்க பால் பொருட்களின் விலைகள் நான்கு முறை உயர்த்தப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.

4.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திவிட்டு, 3.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ததற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்,

சமீபத்தில் கோவில்பட்டி அருகே ஆவின் பால் பாக்கெட்டுகளில் புழுக்கள் இருப்பதால் ஆவின்பால் நிறுவனத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுபோல் தொடர்ந்து ஆவின் நிறுவனத்தின் மேல் அடுக்கி கொண்டே போகலாம்.

கோபிசெட்டிபாளையத்தில் காலாவதியான ஆவின் பிஸ்கட் பாக்கெட்டுகள் விற்கப்பட்டதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோபிசெட்டிபாளையத்தில் காலாவதியான ஆவின் பிஸ்கட் பாக்கெட்டுகள் பறிமுதல்
தவறு செய்த ஆவின் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால், ஆவின் நிறுவனம் காலாவதியாகி விடும்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு ஆவின் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும்
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆவின் பாலகம்,
சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துச் செல்லும் கொடிவேரி அணை பகுதியில் உள்ள ஆவின் பாலகம் உள்ளிட்ட பாலகங்களுக்கு, ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஆவின் பிஸ்கட்டுகள் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.
கொடிவேரி அணை ஆவின் பாலகம் உள்ளிட்ட பாலகங்களில், காலாவதியான பிஸ்கட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக ‘கொடிவேரி அணை – பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு தெரிய வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து மாவட்ட உணவு கட்டுபாட்டு அலுவலர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு இணைய வழியில் விவசாய சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சித்தோடு ஆவின் தலைமை அலுவலகத்தில் இருந்து பிஸ்கட்டுகளை ஏற்றி வந்த, TN43 D7390 ஆவின் வாகனத்தை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த வாகனத்திலிருந்து காலாவதியான பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து, சித்தோடு ஆவின் சேமிப்பு கிடங்கில் இருந்த காலாவதியான 6 டன் பிஸ்கட் பாக்கெட்டுகளை, பவுடர் பாயிண்ட் எனப்படும் இடத்திற்கு மாற்றிவிட்டு. சேமிப்பு கிடங்கில் புதிய பிஸ்கட்
பாக்கெட்டுகளை வைக்கப்பட்டதாகவும், காலாவதியான பிஸ்கட்டுகள் அனுப்பப்பட்டது தெரியாமல் நடந்து விட்ட தவறு என்றும் ஆவின் நிர்வாகம் நாடகமாடி வருகிறது என, இந்த தவறை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த, ‘கொடிவேரி அணை பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத்தினர்’ குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்திற்கு மக்களிடம் மிகவும் நல்ல பெயர் உள்ளது. ஆவின் விற்பனை செய்யும் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களும், பிஸ்கட், இனிப்புகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் மிகவும் தரமானவை என்று மக்கள் உறுதியாக நம்புகின்றனர். அதனால், நம்பிக்கையுடன் ஆவின் பொருள்களை வாங்கி குழந்தைகளுக்கும் கொடுக்கின்றனர்.
கோபிசெட்டிபாளையம் பகுதியில் காலாவதியான ஆவின் பிஸ்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது, ஆவின் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்க்கிறது. நம்பி வாங்கும் பொது மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் இது.

இதுபோன்று செயல்களால் ஆவின் நிறுவனம் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்கும் நிலை உருவாகும்.
எனவே, காலாவதியான பிஸ்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது, ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, தவறு செய்த அதிகாரிகளை காப்பாற்ற முயற்சியில் ஈடுபட்டால் ஆவின் நிறுவனத்தை யாராலும் காப்பாற்ற முடியாத நிலை உருவாகும். அரசால் எந்தவொரு வணிக நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்த முடியாது என்ற அவப்பெயர் மக்கள் மனதில் நிலை பெற்று விடும். எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு, ஆவின் நிர்வாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

திராவிட ஆட்சியில் அரசின் ஆவின் நிறுவனத்தில் நடக்கும் இந்த அவலங்களை பார்க்கும்போது, அரசின் ஆவின் நிறுவனத்தை ஒழித்துவிட்டு தனியார் நிறுவனத்திற்கு பேரம் பேசுவதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *