தமிழக அரசு கட்டிடத்தில் பிரதமர் படம் புறக்கணிப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க..!

தமிழக அரசு கட்டிடத்தில் பிரதமர் படம் புறக்கணிப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க..!

Share it if you like it

விருதாச்சலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பாரதப் பிரதமர் மோடியின் புகைப்படம் புறக்கணிப்பு.

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விருதாச்சலத்தில் புதிதாக கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தை காணொளி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். இக்கட்டிடத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தியின் புகைப்படம் கூட இடம் பெற்று இருந்தது. ஆனால் பாரதப் பிரதமர் மோடியின் படத்தை புறக்கணித்து விட்டு தனது வன்மத்தை மீண்டும் வெளிப்படுத்தி இருந்தது விடியல் கட்சி.

இதனை அடுத்து களத்தில் இறங்கிய பா.ஜ.கவினர் பாரதப் பிரதமரின் மோடியின் புகைப்படத்தை அங்கு வைத்து, தி.மு.க-வின் அராஜக செயலுக்கு தக்க பதிலடியை கொடுத்து உள்ளனர், இது குறித்த செய்தியினை தந்தி டிவி செய்தியாக வெளியிட்டு உள்ளது. தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it