இந்தியா – பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெற நரேந்திர மோடி ஐயா தான் மனசு வைக்கனும்” என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி இவர் வெளியிட்ட அறிக்கையில்,
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் நடைபெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், இதுவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடர் நடைபெறாமல் இருந்து வருகிறது. பொதுவான தொடர்களில் மட்டுமே கலந்து கொண்டு வருகின்றன. இந்த நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடரை நடத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உதவி செய்ய வேண்டும் என உருக்கமான வேண்டுக்கோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.