மத்திய அமைச்சரிடம் பா.ஜ.க. தலைவர் நேரில் வலியுறுத்தல்!

மத்திய அமைச்சரிடம் பா.ஜ.க. தலைவர் நேரில் வலியுறுத்தல்!

Share it if you like it

தமிழகத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்க கூடாது என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மாண்புமிகு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி அவர்களை, தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் திரு. சி.டி. ரவி அவர்களுடன் இன்று நேரில் சந்தித்து, தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதைத் தவிர்க்குமாறு

பா.ஜ.க. சார்பாக கோரிக்கை மனு அளித்தோம். மாண்புமிகு அமைச்சரும் நமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசு, விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளுக்கு என்றென்றும் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.


Share it if you like it