பாரதப் பிரதமர் மோடி குறித்து பி.பி.சி. வெளியிட்ட அவதூறு ஆவணப்படத்தை யூடியூப், டிவிட்டர் நிறுவனங்கள் முடக்கியுள்ளன.
பாரதப் பிரதமர் மோடி குறித்து, பி.பி.சி. அண்மையில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. 2 அத்தியாயங்களை கொண்ட அதில் குஜராத் கலவரத்தில் பிரதமருக்கு தொடர்பு இருப்பதாக காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இச்சம்பவம், நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பையும், கோவத்தையும் ஏற்படுத்தி இருந்தன. இதையடுத்து, பி.பி.சி.க்கு எதிராக பலர் குரல் கொடுக்க துவங்கினர்.
இந்த நிலையில், தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டதை தொடர்ந்து பி.பி.சி.யின் அவதூறு ஆவணப்படங்களை யூ டியூப் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் முடக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.