முருகர் சிலை உடைப்பு – தி.மு.க ஆட்சியில் தலைதூக்குகிறதா ஹிந்து விரோத போக்கு?

முருகர் சிலை உடைப்பு – தி.மு.க ஆட்சியில் தலைதூக்குகிறதா ஹிந்து விரோத போக்கு?

Share it if you like it

  • முருக பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும், அறுவருக்க தக்கவகையில் பேசி. கோடிக்கணக்கான ஹிந்துக்களின், உணர்வுகளை, புண்படுத்தும் விதமாக பேசிய சுரேந்திரனுக்கு. அதிக முக்கியத்துவத்தை, தி.மு.கவின் சன் ஊடகம் அண்மையில் வழங்கியது.
  • இந்துவிரோத அரசின் முதல் இந்து விரோதச் செயல். அரசே ஜீயரை நியமிக்க முனைவது மிகப் பெரிய அராஜகம். கார்டினல் ஆர்ச்பிஷப் பாதிரியாரை நியமிக்கும் துணிச்சல் இந்த இந்து விரோதிகளுக்கு வருமா? வீதிக்கு வந்து போராடுவது தவிர வேறு வழியில்லை என்று. தி.மு.கவிற்கு எதிராக அண்மையில் கருத்து தெரிவித்து இருந்தார். பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா
  • ஈஷா யோகா மையத்தின் மீது விசாரணை நடத்தப்படும் என்று ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அண்மையில் கருத்து தெரிவித்தது. என தி.மு.க மெல்ல, மெல்ல, ஹிந்து விரோத நடவடிக்கைகளை மிக தீவிரமாக மேற்கொள்கிறதோ என்னும் அச்சம் தற்பொழுது ஹிந்துக்கள் மத்தியில் எழ துவங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்து உள்ளார். 

விராலிமலை முருகன் கோவில் மலைபாதையில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த சுவாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருக்கும் காட்சியைக் கண்டு மனது உடைந்து நொறுங்கிப் போனேன். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த இழிவான செயலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.

Image
தி.மு.கவின் கறுப்பர் கூட்டம்
Image
முறைகேடு நடந்த காருண்யா மீது நடவடிக்கையில்லை. ஈஷா மீது உடனே நடவடிக்கை..

 

 


Share it if you like it