“நல்ல ‘பீஸா’ அனுப்பு”… பெண் புரோக்கரிடம் டீல் பேசும் தி.மு.க. நிர்வாகி: காற்றில் பறக்கும் பெண்ணுரிமை!

“நல்ல ‘பீஸா’ அனுப்பு”… பெண் புரோக்கரிடம் டீல் பேசும் தி.மு.க. நிர்வாகி: காற்றில் பறக்கும் பெண்ணுரிமை!

Share it if you like it

பெண்ணுரிமை பேசும் தி.மு.க.வில், நல்ல இளவயசு பெண்ணாக அனுப்பு என்று அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஒருவர், பெண் புரோக்கரிடம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க.வைப் பொறுத்தவரை, சமூகநீதி, சுயமரியாதை, பெண்ணுரிமை என வாய்கிழியப் பேசுவார்கள். ஆனால், இவை அனைத்தையுமே அப்பட்டமாக மீறுவதும் அவர்கள்தான். சமூகநீதி பேசிவிட்டு, தங்களது கட்சி மேடையிலேயே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பார்த்து நீ அந்த ஜாதிதானே என்று கேட்டு அவமானப்படுத்துவார்கள். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் அதிகாரியாகவே இருந்தாலும் அமர்வதற்கு சேர் கொடுக்க மாட்டார்கள். அதேபோல, சுயமரியாதை பற்றி பேசுவார்கள். ஆனால், தொண்டார்கள் தங்களது காலில் விழுந்து வணங்குவதை ரசித்து வேடிக்கை பார்ப்பார்கள். மேலும், பெண்ணுரிமை பற்றி மேடைக்கு மேடை முழங்குவார்கள். தங்களது கட்சிக் கூட்டத்திலேயே பெண்களை பாலியல் சீண்டல் செய்து ரசிப்பார்கள். இது பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபணமாகி இருக்கிறது.

சமீபத்தில் சென்னையில் நடந்த கூட்டத்தில், தி.மு.க.வைச் சேர்ந்த 2 நிர்வாகிகள் பெண் போலீஸுக்கே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில்தான், தி.மு.க. நிர்வாகி ஒருவர், பெண் புரோக்கரிடம் நல்ல பீஸா அனுப்பு என்று டீல் பேசும் ஆடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புதிதாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தது கொள்ளிடம். இதன் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருப்பவர் செல்லசேது ரவிக்குமார். இவர்தான் ஒரு பெண் புரோக்கரிடம் டீல் பேசும் ஆடியோ வெளியாகி இருக்கிறது.

அந்த ஆடியோவில், செல்லசேது ரவிக்குமாருக்கு போன் செய்கிறார் ஒரு பெண் புரோக்கர். பரஸ்பரம் நலம் விசாரிப்பதில் இருந்து இருவருக்குமான உரையாடல் தொடங்குகிறது. அப்போது, அந்தப் பெண் நான் சிதம்பரம் போயிருந்தேன். அங்கு 21 வயசு இளம்பெண் ஒருவர் இருக்கிறார். அனுப்பி வைக்கவா என்று கேட்கிறார். பதிலுக்கு தி.மு.க. ஒன்றியச் செயலாளரோ, போன தடவை மாதிரி பெண்ணாக அனுப்பி வைக்காதே. நல்ல இளவயசா, நல்லா கம்பெனி கொடுக்குற மாதிரி அனுப்பி வை என்று சொல்கிறார். இதன் பிறகு நடக்கும் உரையாடம் சீ…ச்சீ ரகம்.

இந்த ஆடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை கேட்ட பலரும், ஆகா, இதுவல்லவோ தி.மு.க.வின் பெண்ணுரிமை என்று கேலி கிண்டல் செய்து வருகிறார்கள். இன்னும் பலரோ, தி.மு.க.வில் இருப்பவர்கள் எல்லோருமே பொறுக்கிகள்தான். ஆனால், இவர்கள் அடுத்த கட்சிக்காரனை பொறுக்கிகள் என்று கூறுவார்கள் என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஏற்கெனவே, தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் பெரிய கருப்பன், ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதுபோன்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it