நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பிளஸ் -2 மாணவர் சின்னத்துரை, அவரது சகோதரி சந்திரா செல்வி சக மாணவர்களால் சாதியை வன்மத்தால் கொடூரமாக வெட்டப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாங்குநேரி சம்பவம் தொடர்பாக துறை ரீதியிலான முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குனரிடம் நெல்லை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு அறிக்கையை தாக்கல் செய்தார்