பா.ஜ.க.வினர் குறித்து ஆர்.எஸ். பாரதி தெரிவித்த கருத்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.
தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் ஆர்.எஸ். பாரதி. இவர், தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறினார் ; இந்த ஆட்சியின் மீது கை வைத்தால் தமிழ்நாட்டில் ஒரு பி.ஜே.பி.காரன் கூட உயிரோடு இருக்கமாட்டான். இதனை, நான் சொல்லவில்லை. பொதுமக்கள் சொல்கின்றனர் என கூறினார்.
இதற்கு, பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி கொடுத்த பதிலடி இதோ ; ஒரு பி.ஜே.பி காரன் (தேசபக்தர்கள்) மீது கை வைத்தால் கூட இந்த தி.மு.க. அரசு உயிரோட்டத்தோடு இருக்காது என்பதை நான் சொல்லவில்லை நம் அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது என பதிலடி கொடுத்து இருக்கிறார்.